கொடுங்கோல் அரசின் அடக்குமுறை சார்ந்த மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொலன்ன தேர்தல் தொகுதியின் எம்பிலிப்பிட்டிய நகரில் இன்று இப்போராட்டம் நடைபெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொலன்ன தேர்தல் தொகுதியின் அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேஷா விதானகே ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் கலந்துகொண்டார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/068306d5-0a10-49d6-b100-33a5277347eb/22-6263ff7b576da.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/4a87f592-bce8-4a61-8852-a4d5777f7ab6/22-6263ff7b976a9.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/7f24262b-cb51-4bd7-a57b-00be673f9dc8/22-6263ff7bc7a46.webp)
0 comments: