Home » » தேர்தல் ஒன்றை நடத்தத் தயார்! ஆணைக்குழுவின் செய்தி

தேர்தல் ஒன்றை நடத்தத் தயார்! ஆணைக்குழுவின் செய்தி

 


இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றம் தீர்மானித்தால் அதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருக்கும் என அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவது குறித்து நாடாளுமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்றும் தேர்தலுக்கு தேவையான  வசதிகளை செய்து கொடுக்க ஆணையம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க வேலைகளை ஒழுங்கமைக்க சிறிது காலம் எடுக்கும். தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் வேட்பாளர்களுக்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும், அது தோராயமாக மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும் என்றும் அவர் கூறினார்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |