Advertisement

Responsive Advertisement

காலிமுகத்திடல் போராட்ட களத்தில் இருந்து விசேட செய்தி

 


காலிமுகத் திடல் போராட்ட களத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் செய்தி ஒன்றை வழங்கியுள்ளனர்.

எதிர்வரும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினத்தன்று அரசியல்வாதிகளை அழைத்துக்கொண்டு போராட்ட களத்திற்கு வர வேண்டாம் என அவர்கள் அரசியல் கட்சிகளுக்கு அறிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, மே தினத்தன்று தமது கட்சியினரை காலிமுகத்திடல் போராட்ட களத்திற்கு செல்லுமாறு அறிவித்திருந்தார்.

இதனையடுத்தே போராட்ட களத்தில் உள்ள இளைஞர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments