Advertisement

Responsive Advertisement

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - பொருளாதார வல்லுனர்கள் வெளியிட்ட தகவல்

 


இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை குறித்து நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இன்னும் அறியவில்லை என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உப தலைவர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஜுன் மாதத்தின் பின்னர் நாடு இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நம் நாட்டு மக்களுக்கு நிலைமையின் தீவிரம் தெரியுமா என தெரியவில்லை. இந்த வாரம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை என்றால், நிதி ஆலோசகரை நியமித்து, எங்கள் கடனை உடனையாக மறுசீரமைக்க முடியாமல் போய்விடும்.

ஜுலை மாதத்தில் நாங்கள் ஒரு பில்லியன் டொலரை செலுத்த வேண்டிய தேவை உள்ளது. இது எங்கள் கையிருப்பில் இருந்தே செலுத்தப்பட வேண்டும் அதைச் செலுத்துவது என்றால், அடுத்த இரண்டு மாதங்களுக்கு எவ்வித இறக்குமதியும் மேற்கொள்ளாமல் எங்கள் வருமானம் அனைத்தையும் சேமித்து இந்த பில்லியன் டொலர்களை செலுத்த நேரிடும்.

அப்போது இந்த நாட்டில் மருந்து, மின்சாரம், எண்ணெய், எரிவாயு எதுவும் இருக்காது. மே மாத இறுதிக்குள் இந்தியாவில் இருந்து கிடைத்த எண்ணெய் தீர்ந்துவிடும். அதற்குப் பிறகு எப்படி எண்ணெய் கிடைக்கும்? நிலைமை மிகவும் தீவிரமானது.

சர்வதேச நாயண நிதியத்துடன் விரைவாக பேச்சுவார்த்தை நடத்த ஒரு நிதி அமைச்சர் இருக்க வேண்டும். ஒரு அரசாங்கம் இருக்க வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜுன் மாதத்திற்கு பிறகு நாடு முழுவதும் இருளில் மூழ்கும்.

இன்றைய நமது நாட்டின் நிலவரப்படி ஒரு பில்லியன் இல்லை 100 மில்லியன் கூட கொடுக்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments