Advertisement

Responsive Advertisement

வரலாற்றில் முதல் முறையாக அரச தலைவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம்


நிறைவேற்று அதிகாரம் கொண்ட  அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து திட்டங்களையும் உருவாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில், இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் ஒருவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.

சாதாரணமாக அரச தலைவர் ஒருவருக்கு எதிராக அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை கொண்டு வரப்பட்டிருந்தாலும் அரச தலைவருக்கு எதிராக இதுவரை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதில்லை.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதன் மூலம் அரச தலைவர் மீது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதை நாட்டுக்கு காட்டுவதும் சர்வதேசத்திற்கு அதனை உறுதிப்படுத்துவதுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments