Home » » உகண்டாவில் ராஜபக்சவினரின் கறுப்பு பணம்! அம்பலத்திற்கு வரும் பல்வேறு தகவல்கள்

உகண்டாவில் ராஜபக்சவினரின் கறுப்பு பணம்! அம்பலத்திற்கு வரும் பல்வேறு தகவல்கள்

 


இலங்கையின் அரசியல்வாதிகள் வெளிநாட்டு கடன்களை பயன்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்யவில்லை எனவும் அவர்கள் தரகு பணத்தை மாத்திரமே பெற்றுக்கொண்டனர் எனவும் பேராசிரியர் அனுர குமார உத்துமன்கே மற்றும் பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சிங்கள வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இவர்கள் இதனை கூறியுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு கொள்ளையடிப்பு பிரதானமான ஒரு காரணம். நாட்டின் ஆட்சியாளர்கள் கடனை பெறும் போது அவர்களுக்கு தரகு பணம் கிடைக்கும்.

நாட்டிற்னு கடனுதவியின் கீழ் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் போது அரசியல்வாதிகள் அவற்றில் இருந்து தரகு பணத்தை பெற்றுக்கொள்கின்றனர்.

கடந்த காலங்களில் வணிக சந்தைகளில் கடன் பெறப்பட்டுள்ளது. தரகு பணத்தை பெறுதற்காகவே வணிக சந்தைகளில் கடனை பெற்றுள்ளனர். இவ்வாறு பெறப்பட்ட பல கடன்கள் தமது அரசியல் திட்டங்களுக்காக பயன்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு,

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |