நோயாளி காவு வண்டிக்கு எரிபொருள் இல்லை
நினைவு மயக்கும் மருந்து இல்லை
போராட்டத்தில் நோயாளிகளும் இணைவு
( அஸ்ஹர் இப்றாஹிம்)
அம்பாறை வைத்தியர் சங்கம் ஒழுங்கு செய்திருந்த பிரமாண்டமான கவனயீர்ப்பு போராட்டம் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் நேற்றுமுன“தினம் இடம்பெற்றது.
வைத்தியசாலைகளில் நோயாளிகளுக் குரிய மருந்துகள் இல்லாமை , நோயாளி காவு வண்டிக்கு ( ஆம்பியூலன்ஸ்) வண்டிகளுக்கு எரிபொருள் இல்லாமை , நினைவு மயக்கும் மருந்து இல்லாமை போன்ற போன்ற பல்வேறு காரணங்களை முன் வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இப்போராட்டத்தில் வைத்தியர், தாதி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள்,, ஊழியர்கள், சிகிச்சைக்காக வருகை தந்திருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments