Home » » ஒன்பதாவது நாளாக தொடரும் காலிமுகத்திடல் போராட்டம் - நாடு முழுவதிலுமிருந்து குவியும் ஆதரவுகள்

ஒன்பதாவது நாளாக தொடரும் காலிமுகத்திடல் போராட்டம் - நாடு முழுவதிலுமிருந்து குவியும் ஆதரவுகள்


அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த வாரம் சனிக்கிழமை கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பமான போராட்டம் 9 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

மழை வெயில் பாராது இளைஞசர்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்து அந்த பகுதிக்கு "கோட்டாகோகம" என பெயர்சூட்டி இன்றுடன் எட்டாவது நாளாக போராடி வருகின்றனர்.

இதேவேளை, நாளுக்கு நாள் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.

காலிமுகத்திடல் போராட்டத்துக்கு நாடு முழுவதிலும் தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக காலியிலும் இன்று 2 ஆவது நாளாக மக்கள் எழுச்சிப்போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, கண்டியிலும் காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக மக்கள் எழுச்சிப் போராட்டம் இடம்பெற்றது.

இன்று இரவு யாழ்ப்பாண இளைஞச்சர்களும் தமது ஆதரவினை தெரிவிக்கும் முகமாக தீப்பந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.  

Gallery 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |