Advertisement

Responsive Advertisement

கல்லடிப்பாலத்தில் மிட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது !

 


காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டு கல்லடிப்பாலத்தின் கீழ் நீரில் மூழ்கிய நிலையில் கடந்த (22)ம் திகதி மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த பெண் செல்வரெத்தினம் றேணுகாடீதவி (59) வயதுடைவர் என்றும் இவர் பெரியஊறணி மட்டக்களப்பை சேர்ந்தவர் என்றும் இவர் கடந்த 20ம் திகதி தனது வீட்டிலிருந்து முச்சக்கரவண்டி ஒன்றில் மட்டக்களப்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை பின்னர் கடந்த 22 திகதி சடலமாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்ப்பட்டிருந்த நிலையில் கிளிநெச்சியில் வசித்து வரும் பெண்ணின் மகள் தனது தாயார் என சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார் மரணமானவர் தாக் கைபட எழுதிய கடிதத்தில் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை தான் நோய் வாய்பட்டிருப்பதனால் இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற் நீதிவான் ஏ.சி.றிஸ்வான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மற்றும் சட்டவைத்திய அதிகாரி அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments