தாரிக் ஹஸன்)
வட்டுக்கோட்டை, அராலி வடக்கைச் சேர்ந்த 8 மாத யோகசீலன் கிருத்திகா என்ற பெண் குழந்தை தாய்ப்பால் அருந்திவிட்டு உறங்கிக் கொண்டிருந்த வேளை பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை அதிகாலை தாய்ப்பால் அருந்திவிட்டு உறங்கிய குழந்தை அதிகாலை 4.30 மணியளவில் உணர்வற்று காணப்பட்டுள்ளது.
குழந்தை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை ஏற்கனவே உயிரிழந்தமையை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மறண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைதிடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.
0 Comments