Home » » எம்மை எவராலும் அசைக்க முடியாது- வெளியேறுங்கள் இல்லையேல் வெளியேற்றுவேன்; கோட்டாபய கடும் எச்சரிக்கை!

எம்மை எவராலும் அசைக்க முடியாது- வெளியேறுங்கள் இல்லையேல் வெளியேற்றுவேன்; கோட்டாபய கடும் எச்சரிக்கை!

 


நாட்டின் அரச தலைவராக "நான் 69 இலட்சம் மக்களின் ஆணையுடன் தான் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்தேன்.

எனக்கு ஆணை வழங்கிய மக்களை ஏமாற்றவும் மாட்டேன் அவர்களுக்குத் துரோகம் செய்யவும் மாட்டேன் என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் நேற்று நடத்திய அவசர கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

நாடு இன்று பொருளாதார ரீதியில் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில், அமைச்சரவையில் இருக்கும் சிலர், பொறுப்பிழந்து, பதவி என்ற ஒன்றை மறந்து கீழ்த்தரமாகச் செயற்படுகின்றனர்.

இவ்வாறு அரசை விமர்சிப்பவர்களுக்கு அமைச்சுப் பதவி எதற்கு? அமைச்சரவையிலிருந்து கொண்டு அரசை விமர்சிப்பவர்கள், ஒன்றில் தாமாக வெளியேற வேண்டும், இல்லையேல் எனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை நானே வெளியேற்றுவேன் என்று கடும் தொனியில் எச்சரிக்கையுடன் வலியுறுத்தியுள்ளார்.

அரசை வீழ்த்துவது தான் இவர்களின் நோக்கமாக இருந்தால் அது ஒருபோதும் சாத்தியமாகாது. எமது அரசை எவராலும் அசைக்கவே முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |