Advertisement

Responsive Advertisement

சர்வதேச மகளிர் தினத்தில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் கல்விப் புலத்தின் ஆளுமை நகுலேஸ்வரி புள்ளநாயகம் கௌரவிப்பு




( அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை மஹ்மூத் மகளிர் தேசியக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் கல்லூரி ஆசிரியர் சமூத்தால் பொன்னாடை போரத்தி , தலையில் கிறீடம் மற்றும் சுற்றுப் பட்டி அணிவித்து , நிரனவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்..




கல்லூரி அதிபர் யு.எல்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்  ,கல்வி வெளியீட்டு திணைக்கள மேலதிக ஆணையாளர் நாயகம் இசட். தாஜுதீன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம். டபிள்யு. ஜீ. திஸ்ஸநாயக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி  புள்ளநாயகம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன், கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். ஸாஹிர், சாய்ந்தமருது கோட்ட கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ.மலீக் , முன்னாள் இக்கல்லூரி அதிபர் ஏ.எச்.ஏ.பஸீர் , கல்முனை வலய கல்விப்பணிமனையின் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கல்முனை வலய பாடசாலைகளின் அதிபர்கள், கல்லூரி ஆசிரியர்கள் , பழைய மாணவிகள் , பெற்றோர்கள் ,  மாணவர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments