உக்ரைனில் நடந்த போர், கப்பல் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வழிவகுத்தது என்று சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒசாமா ராபி தெரிவித்தார்.
உலகின் அதிமுக்கிய கடல் வாணிப பாதைகளில் ஒன்று சூயஸ் கால்வாய். குறிப்பாக சூயஸ் கால்வாய் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான வேகமான கப்பல் பாதையாகும்.
இந்த கால்வாய் தடைப்பட்டாலோ, அல்லது வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டாலோ, கப்பல்கள் ஆப்பிரிக்கா வழியாக ஆசியா நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.
தற்போதைய நெருக்கடியான காலப்பகுதியில் இதன் கட்டண அதிகரிப்பானது ஆசிய நாடுகளுக்கு குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
0 Comments