உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
கீவ் நகரில் உள்ள இராணுவ தளத்தைக் குறிவைத்து ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக உக்ரைன் இராணுவத் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
உக்ரைன் அரசாங்கமும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கீவ்வில் இருந்து மேற்கே 8 மைல் தொலைவில் கடும் சண்டை நடந்து வருகிறது எனவும் உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
0 Comments