Advertisement

Responsive Advertisement

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யக் கோரும் போராட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பில் காலை இடம்பெற்றது

 


பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யக் கோரும் போராட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பில் காலை இடம்பெற்றது. மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இந்த போராட்டம் வடகிழக்கு வாலிப முன்னணி தலைவர் கி. சேயோன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி தலைவர் லோ.தீபாகரன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது





இந்த போராட்டத்தில் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு மறை.மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை இந்து மற்றும் முஸ்லீம் மதத்தலைவர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்-முஸ்லிம் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர். இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த போராட்டத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இலங்கை ஆசிரியர் சங்கம், கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் உட்பட பல்வேறு பொது அமைப்புகளும் ஆதரவு வழங்கியிருந்தனர். இன்றைய இந்த கையெழுத்துப்பெறும் போராட்டத்தில் பெருமளவான முஸ்லிம் பெண்களும் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியிருந்தனர். இதன் போது அவர்கள் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தும் போராட்டம் நடைபெற்றதுடன், குறித்த தடைச்சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments