Home » » இளைஞன் தூக்கிட்டு தற்கொலை - கன்னன்குடாவில் சம்பவம்

இளைஞன் தூக்கிட்டு தற்கொலை - கன்னன்குடாவில் சம்பவம்

 


வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கன்னன்குடா பிரதேசத்தில் 17 வயதுடைய இளைஞன் சந்திரகுமார் டிலக்ஷன் என்பவர் தனது வீட்டு அறையில் தனக்குத்தானே தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று (17) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவ தினத்தன்று அவரின் தாயார் வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பிய போது வீட்டின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் அயலவர்களின் உதவியுடன் வீட்டின் கதவினை திறந்து உட்சென்ற போது குறித்த இளைஞன் வீட்டின் அறையினுள் தனக்குத்தானே களுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்திருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |