Home » » சாரணிய பயிற்சிப் பாசறை

சாரணிய பயிற்சிப் பாசறை



( எம்.எம்.ஜெஸ்மின் , அஸ்ஹர் இப்றாஹிம்)

ஸ்ரீலங்கா சாரணியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட சாரணியர் சம்மேளனம் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவர்களுக்கு ஒழுங்கு செய்திருந்த சாரணிய பயிற்சிப் பாசறை இன்று  பாடசாலை வளாகத்தில் பாடசாலை அதிபர் யு.எல்.நஸார் தரைமையில் இடம்பெற்றது.
கொவிற் 19 தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக இப்பிரதேசத்தில் சாரணிய செயற்பாடு சற்று தளர்வான நிலையில் காணப்பட்டது. இதனை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த பயிற்சிப்பாசறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்விற்கு கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எஸ் .புவனேந்திரன் பிரதம அதிதியாகவும்  சாய்ந்தமருது கோட்ட கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ.மலீக் , கல்முனை வலய உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் யு.எல்.எம்.சாஜித் , உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம்.இப்றாஹிம் , இராணுவ மேஜர் கே.எம்.தமீம் , முன்னாள் அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட சாரணிய ஆணையாளரும் ஓய்வு பெற்ற அதிபருமான ஐ.எல்.ஏ.மஜீட் , சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் , உதவி மாவட்ட ஆணையாளர்களான எம்.எச்.எம்.ஹலீம் , எம்.அப்துல் சலாம் , எம்.ஐ.எம்.இபாம் , எஸ்.தஸ்தகீர் (ALT , ATC ( Training ) , ஏ.எம்.எம்.டில்ஸாத் ( GSL) , பீ.எம்.றியாத் ( ASL ) , ரீ.முஹம்மட் இன்ஸாப் ( GML ) , சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய உதவி அதிபர்களான எம்.எச்.நுஸ்ரத் பேகம் , எஸ்.ஐ.நஸீஹா பேகம் , உடற்பயிற்சி ஆசிரியர் எம்.எஸ்.எம்.நுஸ்கி , பாடசாலை ஆசிரியர்களான யு.எல்.எஸ்.சர்ஜுனா , எஸ்.ஐ.நஸீஹா பேகம் , கே.எம்.நாஸர் , கே.எல்.ஏ.ஜவ்பர் , ரீ.எல்.எம்.இல்யாஸ் , உட்பட சாணிய மாணவர்களும் கலந்து கொண்டனர்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |