( அஸ்ஹர் இப்றாஹிம்)
2022 பொதுச் சேவை கிரிக்கெட் போட்டிக்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சிக்கு முந்திய 40 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கட் வுற்றுப் போட்டி பாதுக்க பொரேகெதர மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
மஞ்சுள சூரியா தலைமையிலான ஊடக அமைச்சின் கிரிக்கெட் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்த்து.
முதலில் துடுப்பெடுத்தாடிய தொழிலாளர் துறை கிரிக்கெட் அணி 32 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வெகுஜன ஊடக கிரிக்கெட் அணி 18 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.
வெகுஜன ஊடக கிரிக்கெட் அணி சார்பில் நிலந்த 71 ஓட்டங்களையும் , ஜனக 29 ஓட்டங்களையும் , நுவான் 14 ஓட்டங்களையும் , பிரதீப் 14 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் புத்திக 4 ஓவர்கள் பந்து வீசி 30 ஓட்டங்களையும் ,, தீபால் 3 ஓவர்கள் பந்து வீசி 26 ஓட்டங்களையும் ,, 1 நிலாந்த ஓவர் பந்து வீசி 13 ஓட்டங்களையும் ,, நுவான் 1 ஓவர் பந்து வீசி 20 ஓட்டங்களையும் கொடுத்து தலா ஒவ்வொரு விக்கட்டினையும் கைப்பற்றினார்கள்.
கொவிற் – 19 தொற்றுநோய்க்கு முன்னதாக, ஊடக அமைச்சின் குழு 2019 பொதுச் சேவை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியது, அங்கு அவர்கள் சிறந்த செயல்திறன் காரணமாக '' E '' மற்றும் '' F '' பிரிவுகளுக்கு உயர்த்தப்பட்டனர். இந்த போட்டியில் ஊடகவியலாளர்களால் தோற்கடிக்கப்பட்ட தொழிலாளர் திணைக்கள அணி, ''டி'' பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் பலமான பொதுத்துறை அணியாகும்
0 Comments