Home » » தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி சாதனை

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி சாதனை




 தேசிய விஞ்ஞான மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 2020/2021 ஆம் ஆண்டிற்கான தீவளாவிய ரீதியிலான விஞ்ஞான ஆராய்ச்சிப் போட்டியில் சவால் நிறைந்த இச் சூழ்நிலையினையும் பொருட்படுத்தாது  பங்குபற்றி மிகச்சிறந்த 10 ஆராய்ச்சிகளுள் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டு, வெற்றியீட்டியுள்ள மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையைச் சேர்ந்த 

1. மேகராசா ரதுக்கேஷ் 

2. பிரபாகரன் கோவர்த்தனன்

3. தில்லைவாசன் மனோஜ்கரன்

 குழுவினையும், தொடர்ச்சியாக தன் சிறந்த வழிகாட்டலின் கீழ் மாணவர்களை நெறிப்படுத்தி வெற்றிகள் பலவற்றை தொடர்ச்சியான அயராத உழைப்பால் தம் வசப்படுத்திக் கொண்டிருக்கும்  எமது இரசாயனவியல் ஆசான் திரு செ. தேவகுமார் (STK) ஐயா அவர்களையும் பாராட்டி வாழ்த்துகின்றோம். அத்துடன் இப்போட்டியில்  ஆசானின் வழிகாட்டலின் கீழ் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் (2019, 2020, 2021) எமது பாடசாலை வெற்றியீட்டியுள்ளமை மெய் சிலிர்க்க வைக்கின்றது. அத்துடன், இம்முறையும் தனியொரு தமிழ்ப் பாடசாலையாக தடம் பதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் பங்குபற்றி தமது திறமைகளை திறம்பட வெளிப்படுத்திய  வேதாஞ்சனா, லிதுர்சா, றோமியா, டினுக்சன், பிதுர்ஷன், சுகிலன் ஆகியோரையும் சாதனைகளுக்கு பக்கபலமாக இருக்கின்ற பெற்றோரையும் பாடசாலை சமூகத்தையும்  ஏனைய நல்லுள்ளங்களையும் பாராட்டுகின்றோம்.


தன்னம்பிக்கை தலைநிமிர்த்தும்...💪💪💪

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |