( அஸ்ஹர் இப்றாஹிம் ),
இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் அம்பாறை மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ( National Chess championship-2022) நிந்தவுர் அல் அஸ்றக் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இதன்போது நிந்தவுர் அல் அஸ்றக் தேசிய பாடசாலையைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் தேசிய மட்ட ரீதியில் நடாத்தப்பட்ட Sri Lanka national Novices chess championship 2022 போட்டியில் வெற்றிபெற்றுள்ளனர்.
இக்கல்லூரியைச் சேர்ந்த ஏ.ஏ.பாஸில் அப்துல்லாஹ்,எம்.ஸி.ஹிமாத்.எம். எம்.எம் அக்மல் ,எம்.ஆர்.ஏ.ஹஸன் அல் பன்னா ஆகிய மாணவர்கள் தேசிய மட்ட major division போட்டிகளுக்கும் தெரிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்
0 Comments