இதுவரை நாம் எதிர்கொண்ட தடைகளைக் கடந்து, புதிய பயணத்தை மேற்கொள்ள தயாராக உள்ளேன். அதற்காகக் கடுமையான முடிவுகளை எடுக்கவேண்டி ஏற்பட்டாலும், அதற்கும் நான் தயாராகவே இருக்கிறேன் என சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa)தெரிவித்துள்ளார்.
மஹா விஹாரவசங்சிக கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையினால் அரச தலைவருக்கு ”ஸ்ரீ லங்காதீஸ்வர பத்ம விபூஷன” விருது நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
0 Comments