Advertisement

Responsive Advertisement

கடினபந்து கிறிக்கெட் விளையாடுவதற்குரிய தள விரிப்பினை திருகோணமலை மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மஃறூப் பெற்றுக் கொடுத்தார்


( அஸ்ஹர் இப்றாஹிம்)


மூதூர் முஹம்மதியா விளையாட்டுக்  கழகத்தின் மிக நீண்ட நாள் குறைபாடாக காணப்பட்ட கடினபந்து கிறிக்கெட் விளையாடுவதற்குரிய தள விரிப்பினை  திருகோணமலை மாவட்ட கௌரவ  பாராளுமன்ற  உறுப்பினர் இம்றான்  மஃறூப் தனது நிதியிலிருந்து பெற்றுக் கொடுத்துள்ளார்.
கடினபந்து கிறிக்கெட் விளையாடுவதற்குரிய தள விரிப்பினை  உத்தியோக புர்வமாக வழங்கி வைக்கும் நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம.முபாரக் , உதவித் திட்டமிடல் பணிப்பாளர்    பீ. அரபாத்   , பொறுப்பளிக்கப்பட்ட உத்தியோகஸ்தர்கள் , முன்னாள் கழக தலைவர்  சவாகிர்  , பிரதேச ஐக்கிய தேசியக்கட்சி முக்கியஸ்தர்கள் , கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments