Advertisement

Responsive Advertisement

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு நலன் கருதி நீதிமன்ற கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது

 


அஸ்ஹர் இப்றாஹிம்)


முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் ஆகிய பகுதியைச் சேர்ந்த மக்களின் நலன் கருதி சிறப்பான சேவையொன்றினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மாங்குளம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீதிமன்ற கட்டிடத் தொகுதியானது நீதி அமைச்சர் கௌரவ அலிசப்ரி அவர்களினால் கடந்த வியாளக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.


முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி  நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்லஸ் தேவானந்தா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட சட்டத்தரணிகள் பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments