Home » » யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு....

யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு....

 


எம்.ஐ.எம்.அஸ்ஹர்


நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக சொத்திழப்பு,  கடும் பாதிப்புற்றோர்க்கான கொடுப்பணவு , வணக்கஸ்தல அழிவுகளுக்கான கொடுப்பணவு ஆகியவற்றுக்கான காசோலைகள்  வழங்கும் நிகழ்வு அண்மையில்  மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

நீதி அமைச்சின் இழப்பீட்டு அலுவலகத்தினால் நெறிப்படுத்தப்படும் குறித்த இழப்பீடு வழங்கும் நிகழ்வில் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 16 பயனாளிகளுக்கும் மற்றும் துணுக்காய் பிரதேச செயகப் பிரிவிற்குட்பட்ட 22 பயனாளிகளுக்கும் குறித்த இழப்பீட்டு காசோலை இன்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களால்  வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் கடந்த வருட பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட  15 பாலர் பாடசாலைகளுக்கான சமையல் உபகரணங்களும், மதஸ்தலங்களுக்கான ஒலிபெருக்கிகள், முதியோர் சங்கத்திற்கான தளபாடங்கள் போன்றன அன்றைய தினம்   வழங்கி வைக்கப்பட்டது. 

குறித்த நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |