Home » » ஒரே நாளில் இரு நியமனங்கள் ! மட்டு மாநகரசபையின் ஆணையாளராக மீண்டும் மா.தயாபரன் நியமனம்.

ஒரே நாளில் இரு நியமனங்கள் ! மட்டு மாநகரசபையின் ஆணையாளராக மீண்டும் மா.தயாபரன் நியமனம்.

 


மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக மீண்டும் மா.தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார் . 

 கிழக்கு மாகாண ஆளுநரால் கடந்த நவம்பர் 30ம் திகதி வழங்கப்பட்ட கடிதத்தில்  மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக  சிவலிங்கம் நியமிக்கப்பட்டிருந்தார் ,  அதன் பின்னர்  மா.தயாபரன் ஆணையாளராக தான் தொடர்ந்து இருப்பதாகவும் கூறியிருந்தார் . 

இதே வேளை இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபையின்  ஆணையாளராக   ந.சிவலிங்கம் இன்று  (புதன்கிழமை) தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார் . 

பின்னர்   இன்று 3.00 மணியளவில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக  மீண்டும் மா.தயாபரன்  நியமிக்கப்பட்டுள்ளார் .  இவர் கடந்த ஒரு வருடமாக மாநகரசபையின் ஆணையாளராக கடமையாற்றி வருகிறார் 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |