Home » » மண்டூர் பகுதியில் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை

மண்டூர் பகுதியில் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை

 


வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் கணேசபுர பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை நேற்று மாலை (10) தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நான்கு பிள்ளைகளின் தந்தையான இராஜரெத்தினம் சிங்கராசா (வயது 42) என்பவரே தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஏற்பட்ட  தகராற்றினால் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் அறையினுள் தனக்குத்தானே தூக்கிட்டிருந்த நிலையில் அயலவர்களின் உதவியுடன் தூக்கில் இருந்து மீட்டெடுத்த போது குறித்த நபர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |