Advertisement

Responsive Advertisement

காஸ் அடுப்புகளும் வெடித்து சிதறுகின்றன

 


சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது , காஸ் அடுப்புக்களும் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.


சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவம் நேற்றைய தினம் அம்பாறை, சாய்ந்தமருது பகுதியிலும் பதிவாகியிருந்தது. அசம்பவத்துடன் இந்த மாதத்தில் மாத்திரம் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இன்று (28) புத்தளம் ஆராய்ச்சி கட்டுவ பகுதியிலும் சிலிண்டர் தீப்பிடித்திருந்தது. சிலிண்டரை நீர் நிலைக்குள் தூக்கி வீசியுள்ளனர். அதனால், பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், வடக்கில் எரிவாயு அடுப்புக்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு நேற்று (27) வெடித்து சிதறியிருந்தது , யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு இன்றைய தினம் வெடித்து சிதறியுள்ளது.

கந்தரோடை வீட்டில் எரிவாயு சிலிண்டர் சமையல் அறைக்கு வெளியே வைக்கப்பட்டு இருந்தமையால் , அடுப்பு வெடித்து தீ பிடித்த போது பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டது

Post a Comment

0 Comments