Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிரித்தானிய அமைச்சருடன் சுமந்திரன் சந்திப்பு!

 


பிரித்தானியாவின், தென்னாசிய மற்றும் பொதுநலவாய நாடுகளிற்கான அமைச்சரான தாரிக் அஹமட் பிரபு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு கடந்த 25ம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், சுமார் ஒரு மணி நேரம் வரையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுளளது.

இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் தாரிக் அஹமட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்த பதிவில் “சுமந்திரனை சந்தித்ததில் மகிழ்வடைகிறேன். மனித உரிமைகளை பேணுவது, பிரச்சினைகளின் பின்னரான பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் ஆகிவற்றோடு அனைத்து சிறுப்பான்மையினரதும் உரிமைகளை மதிப்பதன் முக்கத்துவம் குறித்தும் நாங்கள் கலந்துரையாடினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கலந்து கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments