Advertisement

Responsive Advertisement

அனைத்து தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பம்

 


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்கள் நாளை (22) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அலகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார்.

தற்போது தரம் ஒன்று முதல் 5 வரையிலான தரங்களும், 10 முதல் உயர்தர வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், கொரோனாவின் தாக்கம் சற்றுக் குறைந்ததையடுத்து, கட்டம் கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments