Home » » வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் கால எல்லையை வெளியிட்டது நிதி அமைச்சு

வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் கால எல்லையை வெளியிட்டது நிதி அமைச்சு

 


வாகன இறக்குமதிக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படாது என நிதி அமைச்சு தெரிவிக்கின்றது.


நிதி அமைச்சின் செயலாளர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதாகவும், வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாகன இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தான் நினைக்கவில்லை எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

எதிர்வரும் 6 முதல் 7 மாதங்களுக்கு வாகன இறக்குமதி சந்தை திறக்கப்படாது என நிதி அமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |