Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சமையலறையில் கேஸ் அடுப்பும் வெடித்தது - ஏறாவூரில் சம்பவம்

 


ஏறாவூரில் சமையலறையில் கேஸ் அடுப்பு ஒன்று வெடித்து நொறுங்கியுள்ளது. எனினும், தெய்வாதீனமாக எவருக்கும் காயங்களோ, சேதங்களோ ஏற்படவில்லை என்று வீட்டுரிமையாளர்கள் தெரிவித்தனர்.


ஏறாவூர், மிச்நகர் பகுதியில் இந்தச் சம்பவம், இன்று (29) நண்பகல் 12.15க்கு இடம்பெற்றுள்ளது.

மௌலவி மஹ்மூதுலெப்பை நயீம் என்பவரின் வீட்டில் அவரது மனைவி சமையல் வேலைகளில் ஈடுபட்டு முடிந்ததும் கேஸ் சிலிண்டரை நிறுத்திவிட்டு, சமையலறையில் இருந்து வெளியே வந்தபோது கேஸ் அடுப்பு வெடித்துள்ளது.

கேஸ் அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளபோதிலும் தீ பற்றிக் கொள்ளவில்லை என்றும் அதனால் பொருள் சேதங்களோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் வீட்டார் தெரிவித்தனர்

Post a Comment

0 Comments