மன்னார் மடு தேவாலயத்துக்கு உரித்தான சொத்துக்களை பலாத்காரமாக கைப்பற்ற பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர்(gnanasara thero) சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன(Kavinda Jayawardana) பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
அவருக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றியபோது வலியுறுத்தினார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“ஈஸ்டர் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நீதி கோரும்போது, அந்த மக்களை விசாணைக்கு அழைத்துச்செல்கின்றனர். அதேபோன்று ஞானசார தேரர் மன்னார் மடு தேவாலயத்துக்குச் சென்று மீண்டும் பிரச்சினை ஏற்படுத்த முயற்சிக்கின்றார். மடு தேவாலயத்தின் காணிகளை பலாத்காரமாக பெற்றுக்கொள்ள முற்படுகின்றார்.
நாட்டில் கடந்த காலங்களில் சிங்கள, தமிழ் பிரச்சினையை ஏற்படுத்தினார்கள், சிங்கள, முஸ்லிம் பிரச்சினையை ஏற்படுத்தினார்கள். அற்போது சிங்கள,கத்தோலிக்க பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதற்கு அரசாங்கம் இடமளி்க்கக்கூடாது.
எனவே மடு தேவாலயத்துக்கு சொந்தமான சொத்துக்களை பலாத்காரமாக கைப்பற்றிக்கொள்ள ஞானசார தேரர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயற்படுகின்றார்.
உடனடியாக அரசாங்கம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்
0 comments: