கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை 9ம் வட்டாரத்தைச்சேர்ந்த (26) வயதுடைய கணபதிப்பிள்ளை அனிதா என்பவரே தனது வீட்டின் அறையில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த யுவதி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கணவரை பிரிந்து தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில் சம்பவ தினத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் அறையினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான்அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு எடுத்துச்செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: