கொழும்பு - ரத்மலான விமான நிலையத்திலிருந்து பிராந்திய சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை இன்றைய தினம் வெளியிட்டுள்ளது.
குறித்த சர்வதேச விமானப் பயணம் ஆரம்பிக்கப்பட்டால் கொழும்பில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் உட்பட 2 சர்வதேச விமான நிலையங்கள் சேவையில் இருக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
ஐந்து தசாப்தங்களுக்குப் பின்னர் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments