Home » » வியாழேந்திரனின் பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்ட இளைஞன்- சர்வதேச நீதி கோரும் தாய்!

வியாழேந்திரனின் பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்ட இளைஞன்- சர்வதேச நீதி கோரும் தாய்!

 இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்(Sathasivam Viyalenthiran)  வீட்க்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பாலசுந்தரம் என்ற இளைஞனின் தாய்,  சர்வதேச தலையீட்டுடன் ஒரு நீதியான விசாரணை வேண்டுமென கோரியுள்ளார்.

படுகொலை தொடர்பான வழக்கு இன்று இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த ஜூன் மாதம் 21 ம் திகதி 34 வயது மதிக்கத்தக்க பாலசுந்தரம்(Balasuntharam) எனும் இளைஞன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால்


சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

அது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி இ.தியாகேஷ்வரன்(E.Thiyaheshwaran)  முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது இன்றுடன் தனது மகன் படுகொலை செய்யப்பட்டு நூறு நாட்கள் கடந்த போதிலும் இதுவரைக்கும் விசாரணையில் தனக்கு திருப்தி இல்லை என தாயார் தெரிவித்துள்ளார். அரசியல் பலத்தையும் பண பலத்தையும் வைத்துக் கொண்டு தனது மகனுடைய விசாரணைகள் திசை திருப்பப்படுகிறதா என்ற சந்தேகம் எழுத்துள்ளதகவும் தெரிவித்துள்ளார்.     

மேலும் வழக்கை விசாரணை மேற்கொண்ட நீதிபதி, குறித்த வழக்கு சி.ஐ.டிக்கு மாற்றக் கோரியும் மட்டக்களப்பு பொலிஸாரால் குறித்த வழக்கினை பிரிதொரு பிரிவுக்கு இதுவரைக்கும் பாரம் கொடுக்கவில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த வழக்கு எதிர்வரும் 4ம் திகதி மீண்டும் அழைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |