Advertisement

Responsive Advertisement

நாடு ஸ்தம்பிதமடையும் அபாயம்- மிகப்பெரிய வேலை நிறுத்தம் விரைவில்

 


கெரவலப்பிட்டிய LNG மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவுக்கு வழங்க எடுத்த தீர்மானத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் நடத்தப்படவுள்ளது.


முக்கியமான சில தொழிற்சங்கங்கள் இதற்கான பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்த வகையில் இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் இதற்கான தலைமையை ஏற்று நடத்தவுள்ளது.

மேலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விநியோகப் பிரிவு தொழிற்சங்கம், துறைமுக ஊழியர்கள் தொழிற்சங்கம் உள்ளிட்ட தரப்பினரும் இதில் இணைந்து வேலைநிறுத்தத்திற்கு பேச்சு நடத்திவருகின்றனர்.

மாத இறுதியில் இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படலாம் என்றும் அவ்வாறு இடம்பெற்றால், முழு நாடும் ஸ்தம்பித்துப் போகும் அபாயம் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments