Home » » சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

 


சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ம் திகதி வரையில் சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த மாதம் 30ம் திகதி வரையிலான காலப் பகுதியில் கலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் ஒராண்டு காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி வரையிலான காலப் பகுதியில் கலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக் கொள்வதில் நிலவி வரும் சிக்கல்களை கருத்திற் கொண்டு இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |