பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த திணைக்களத்திற்கு எதிராக கடந்த வாரங்களாக ஜனாதிபதிக்கும், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சிற்கும் முறைப்பாடுகள் குவிந்திருக்கின்றன.
பரீட்சைகளை நடத்துவதில் ஏற்பட்ட அதீதத் தாமதம், பெறுபேறுகள் வெளியிட ஏற்பட்ட தாமதம் என பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையிலேயே அரசாங்கத்தின் உயர்பீடம் மேற்படி முடிவை எடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது
0 comments: