Home » » வடக்கில் அதிகரிக்கும் அச்சம் -6 நாட்களில் 75 பேரை பலியெடுத்த கொரோனா

வடக்கில் அதிகரிக்கும் அச்சம் -6 நாட்களில் 75 பேரை பலியெடுத்த கொரோனா

 வடக்கு மாகாணத்தில் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 6 நாள்களில் 75 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் வவுனியா மாவட்டத்தில் 29 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 27 பேரும் கடந்த 6 நாள்களில் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணத்தில் நேற்று திங்கட்கிழமை (செப். 6) 11 பேர் கொவிட்- 19 தொற்றினால் உயிரி


ழந்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 பேரும் வவுனியா மாவட்டத்தில் 3 பேரும் முல்லைத்தீவில் 2 பேரும் கிளிநொச்சியில் ஒருவரும் என 11 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் 2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 488 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |