கொரோனா தொற்று மற்றும் திரிபடைந்த டெல்டா தொற்று பரவும் வீதம் அதிகரித்துள்ள நிலையில் நாட்டில் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.
அந்த வகையில், விசேட பேச்சுவார்த்தையொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சுகாதாரத்துறை நிபுணர்கள், அதிகாரிகள் எனப் பலரும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
பயணக்கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்கும்படி இதன்போது கோரிக்கையை அவர்கள் முன்வைக்கவுள்ளதாக தெரிகிறது.
0 comments: