Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது...!!


 (எஸ்.எம்.எம்.முர்ஷித்)

மட்டக்களப்பு- கறுவாக்கேணி வீதி செம்மணோடையில் வைத்து ஐஸ் மற்றும் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் இன்று (16.07.2021) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிசாரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே மேற்படி நால்வரும்; கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 30550 மில்லி கிராமும் கேரளா கஞ்சா 500 மில்லிகிராம் என்பன கைப்பற்றப்பட்டதுடன் இந்த வருடத்தில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கைப்பற்றப்பட்ட அதிகூடிய ஐஸ் போதைப்பொருள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர்கள் நால்வரும்; 45 வயதுடைய இருவரும் 44 மற்றும் 40 வயதுடையவர்கள் என்றும் தெரிவித்த பொலிஸார் இவர்கள் ஓட்டமாவடி, செம்மண்ஓடை, பிறைந்துறைச்சேனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதுடன் பிரபல போதைவஸ்து வியாபாரிகள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments