மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த இளைஞன் நேற்று முன்தினம் இரவு தனது மாடுகளை பார்த்துவிட்டு வருவதாக தனது தாயிடம் கூறி விட்டுச் சென்ற பல மணி நேரங்கள் கடந்து வீடு திரும்பாத நிலையில் குறித்த இளைஞரின் உறவினர்கள் அவரை தேடி திரிந்தனர் இருப்பினும் குறித்த இளைஞனை அன்று இரவு அவர்கள் கண்டுபிடிக்கவில்லை
நேற்று (15)அதிகாலை 5 மணியளவில் திக்கோடை பொது மயானத்தில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கு அமைய வெல்லாவெளி பிரதேச பிரிவுக்குட்பட்ட பதில் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் குறித்த இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தினை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.
அதனையடுத்து குறித்த இளைஞனின் சடலமானது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: