செ.துஜியந்தன்
இன்று(05) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக பிரதானவீதியில் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கல்முனை ஒன்று கிராம சேவகர் பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை அரச காணி ஒன்றினை தனிநபர்கள் அபகரிக்க முற்பட்ட வேளையில் அவ் இடத்திற்குச் சென்று அதனைத் தடுத்து நிறத்த முற்பட்ட கிராம சேவை உத்தியோகத்தரை தனது கடமையைச் செய்யவிடாது தடுத்ததுடன் அங்கு நின்றவர்கள் அவரை தாக்க முற்பட்டுள்ளனர். இச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே கிராம உத்தியோகத்தர்கள் கவனஈர்ப்பு பொராட்டத்தில் ஈடுபட்டனர்
குறித்த கிராம சேவை உத்தியோகத்தருக்கு நீதியை பெற்றுத்தருமாறும், கிராமசேவை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறக்கூடாது எனக் கோரியும் கவனஈர்ப்பு போராட்டம் இன்று நண்பகல் வேளையில் நடைபெற்றது
குறித்த கிராம சேவை உத்தியோகத்தருக்கு நீதியை பெற்றுத்தருமாறும், கிராமசேவை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறக்கூடாது எனக் கோரியும் கவனஈர்ப்பு போராட்டம் இன்று நண்பகல் வேளையில் நடைபெற்றது
கவனஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள் கிராம சேவை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து, அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்ததாதே, அரச கடமைகளில் பிரிவினை வாதம் வேண்டாம் போன்ற வாசகங்களைத் தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் இக் கனவஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்முனை வடக்கு கிராம சேவை உத்தியோகத்தர்கள் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை அங்கு வருகை தந்த கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜிடம் கையளித்தனர்.
பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் குறித்த சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களையும் கடமைக்கு திரும்புமாறும் கோரிக்கைவிடுத்தார். இதனையடுத்து கவனஈர்ப்பு போராட்டத்தை கைவிட்டு கிராம சேவை யாளர்கள் கடமைக்கு திரும்பினார்கள்.
0 comments: