Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இணைய வசதிகளுடைய 2,000 கல்வி நிலையங்கள் திங்களன்று கையளிப்பு !

 


பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக, இணையவசதிகளைக் கொண்ட 2,000 கல்வி நிலையங்கள் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ளன என்று, கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


இணையவசதிகளுடைய குறித்த நிலையங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்தோதையா ஆய்வகங்கள், வணக்கஸ்தலங்களில் நடத்திச்செல்லப்படும் கல்விநிலையங்கள், சமூக அரங்குகளில் நடத்திச் செல்லப்படும் கல்வி நிலையங்களில் இதுபோன்ற இணையவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத் தலைவர்கள், கல்வி வலயங்களின் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோர் குறித்த இடங்களை அடையாளப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments