மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட மாமாங்கம் கிராம சேவையாளர் பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனம்காணப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டதன் காரணமாக 11 வது நாளாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மாமாங்கம் கிராம சேவையாளர் பிரிவில் இருந்து எந்தவொரு நபரும் வெளியில் செல்வதையும், வெளிநபர்கள் வருவதையும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
0 comments: