நாடளாவிய ரீதியில் அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் தாதியர்கள் நாளையும் நாளை மறுதினமும் வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தற்போதுள்ள கொவிட் தொற்று நிலைமை்கு மத்தியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை புகையிரத டிக்கெட்டுகளை மின்னணு முறையில் வழங்குவது தொடர்பான வேலைதிட்டத்தை வௌிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் ரயில்சாரதிகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments