Home » » கைத்தொலைபேசிகளுக்குள் மீண்டும் ஊடுருவும் 'ஜோக்கர்' - மக்களுக்கு எச்சரிக்கை

கைத்தொலைபேசிகளுக்குள் மீண்டும் ஊடுருவும் 'ஜோக்கர்' - மக்களுக்கு எச்சரிக்கை


 'ஜோக்கர்' என்ற வைரஸ் மூலம் கைத்தொலைபேசியில் உள்ள அனைத்து தகவல்களும் திருடப்படுவது மட்டுமின்றி கைத்தொலைபேசியை செயலிழக்கச் செய்வதாகவும் குயிக் ஹீல் அன்டிவைரஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.

முன்னதாக கடந்த 2020 ஜூலையில், கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கக்கூடிய 40க்கும் மேற்பட்ட செயலிகளை இந்த வைரஸ்கள் குறிவைத்திருந்தது.

இதனையடுத்து, குறித்த செயலிகளை ப்ளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியது. தற்போது 'ஜோக்கர்' என்ற இந்த வைரஸ் 8 க்கும் மேற்பட்ட செயலிகள் மூலம் கைத்தொலைபேசிகளுக்குள் ஊடுருவி, தகவல்களை திருடி வருவதாக தெரியவந்துள்ளது.

கோ மெசேஜஸ், ப்ரீ கேம் ஸ்கேனர், பாஸ்ட் மெஜிக் எஸ்.எம்.எஸ்., சுப்பர் மெசேஜ், எலிமென்ட் ஸ்கேனர், ட்ரவல் வோலபேப்பர் போன்ற செயலிகள் மூலம் கைப்பேசிக்குள் நுழையும் ஜோக்கர் வைரஸ்,

வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகள், ஓடிபி போன்றவற்றை திருடுவதாக தெரியவந்துள்ளது.

இந்த செயலிகளை பயன்படுத்துவோர் உடனடியாக கைத்தொலைபேசியில் இருந்து நீக்கி விடுமாறு 'குயிக் ஹீல் அன்டிவைரஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |