Home » » பயணத் தடை தளர்வு- போராட்ட பூமியாக மாறியுள்ள தென்னிலங்கை!

பயணத் தடை தளர்வு- போராட்ட பூமியாக மாறியுள்ள தென்னிலங்கை!

 


நாடளாவிய ரீதியில் இன்று பயணத் தடை தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் தென்னிலங்கையில் பல்வேறு போராட்ட்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில், ஜனாதிபதி செயலகத்தை நோக்கி முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிபல்ல மேலும் தெரியவருகையில், 

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொத்தலாவல தனியார் பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக இன்று பிற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |