Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொழும்பு புறநகர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா தொற்றாளர்

 


கொழும்பு கஹதுடுவ − ஜயலியகம பகுதியில் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த தகவலை கஹதுடுவ சுகாதார வைத்திய அதிகாரி தனுக்க பத்மராஜ தெரிவித்துள்ளார்.

47 வயதான குறித்த நபர், கொழும்பு − கொம்பனித்தெரு பகுதியிலுள்ள பிரதான நிர்மாணத்துறை அலுவலகமொன்றில் பணியாற்றியுள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர், பொலனறுவை கொவிட் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நபரின் மனைவி, மகன் உள்ளிட்ட 50 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த நபர் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து, இந்த வைரஸ் பரவியிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments