(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் ஐயன்கேணி கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து முதியவரான ஆணொருவரின் சடலத்தைத் தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை 29.06.2021 மீட்கப்பட்ட சடலம் ஐயன்கேணி கிராமம் கிருஷ்ணன் கோயில் வீதியை அண்டி வசித்து வந்த காளிக்குட்டி நாகராசா (வயது 60) என்பவருடையது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மனைவியும் இவரும் வசித்து வந்த நிலையில் இந்த முதியவர் செவ்வாய்க்கிழமை அவரது வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கபட்டதையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இறந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என பரிசோதனையின்போது தெரிவந்துள்ளாக பொலிஸ் வாக்குமூலத்தில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கூலித் தொழில் செய்து சீவியம் நடத்திய இவருக்கு நீண்ட நாட்பட்ட ஆறாத காயம் இருந்தது என உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments